Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, 'Parvathi's penance to unite with Shiva - Darasuram|ஒரு ஆறு வயதுச் சிறுமி செய்யும் தவமா இது - பார்வதி ஈசனை நினைத்து தவம் - தாராசுரம் '
When Satheesh told me that he was planning to go to Darasuram, I immediately asked him to take some pictures of the amazing pillar sculptures in the pillared hall. He obliged with some delightful pictures. They depict some lovely scenes from the birth of Lord Murugan. Though the Sanskrit work of Kalidasa ( Kumarsambhava) deals [...]
ஒரு ஆறு வயதுச் சிறுமி செய்யும் தவமா இது - பார்வதி ஈசனை நினைத்து தவம் - தாராசுரம்
நண்பர் திரு சதீஷ் அவர்கள் இந்த வாரம் தாராசுரம் செல்கிறேன் என்றார். அங்கே மண்டப தூண்களில் ஸ்கந்த புராணம் சிற்பங்கள் உள்ளன என்றும் அதை படம் பிடித்து வருமாறு கேட்டேன்.அவரும் அவ்வாறே எடுத்து வந்துள்ளார். அருமையான சிற்பங்கள். அவற்றை விளக்க நல்ல தமிழ் உரை தேடும் பொது நண்பர் வைரம் கச்சியப்ப சிவாச்சாரிய முனிவர் எழுதியுள்ள கந்தபுராணத்தில் இதன் வர்ணனை உண்டு என்று ஒரு ஆங்கில நூலை தந்தார். படித்த பின், மதுரை திட்டத்தில் தேடி அண்மையில் அந்த நூலும் இந்த அற்புத திட்டத்தில் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து அவற்றை எடுத்து திரு திவாகர் அவர்களின் உதவியுடன் இங்கே படைக்கிறேன். இணையத்தின் அற்புதம் - நண்பர்களின் உதவி - உருவாகிறது பார்வதி கல்யாணம். இதனை நாம் முன்னர் பார்த்த தஞ்சை தக்ஷ வதம் கதைக்கு தொடர்ச்சி என கருதி வாசிக்கவும்.