தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பான பண்டிகை கொண்டாடுவது வழக்கம். கார்த்திகை மாதம் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா இல்லங்களில் மட்டுமல்லாமல் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமைகள் விலகி நன்மைகள் பெருக கொண்டாடப்படும் இவ்விழாவில் வீடுகளில் வரிசையாக தீபங்களை ஏற்றி பூஜை செய்வது வழக்கம். மலைக்கோயில்களில் மலை மீது தீபம் ஏற்றுவது கண்கொள்ளக் காட்சியாகும் இதைத் தவிர சிவ , வைணவ திருத்தலங்களில் ஸ்வாமி புறப்பாடு மற்றும் சொககல் தீப திருவிழாவாக நடைபெறும். இந்த சொக்கல் என்பது பனை ஓலை மற்றும் பனை மடடையால் கூடாரம் போல் செய்து அதில் அகல் விளக்கு ஏற்றி வைத்து பின் தீப்பந்தததின் மூலம் பற்றவைத்து விழாவாக கொண்டாடப்படிகிறது. தீய இருளைப் போக்கி நன்மை என்ற வெளிச்சத்தை காட்டும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இநத் சொக்கல் திருவிழாவை video-வில் கண்டு மகிழுங்கள். http://www.heritagetown.org/video/video.html